வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Sunday, June 30, 2013

அலைந்திடும் வாழ்க்கை

காலை 11.30 மணிக்கு ஆட்டோவில் புறக்கோட்டைக்கு ஒரு பயணம் ,அதுவும் ஷாப்பிங் (shopping) போனோம் ,



முதல் ஒரு டெக்ஸ்டைல் main street ல இருக்கிற ஒரு பிரபலமானா கடை  , நானும் அவையை விட்டுட்டு வேறு ஒரு கடைக்கு போனேன் , நான் கடைக்கு பொய் வந்திட்டேன் ஒன்றறை மணித்தியாலத்தில  இருந்தாலும் டெக்ஸ்டைல்க்கு  போனவை இன்னும் வரவில்லை , நானும் அந்த கடைக்குள்ள போனேன் , நான்கு சுடிதார் எடுத்து வைத்து கொண்டு இருக்கினம் , ஒரு சுடிதார் சராசரி விலை 6000/=  - 7000/=




அந்த கடையில ஏறத்தாழ ரெண்டு மணித்தியாலங்கள் நானும் நின்றேன் , அங்க ஒரு மாதிரி முடிச்சு கொண்டு வந்தாங்க இருப்பினும் மறக்காமா  அங்க ஒரு பெரிய பில் வைத்திட்டு தான் வந்தவை


  "அப்ப இப்ப யாவது முடிச்சிட்டு வந்திட்டினம் என்று நினைக்க "

அந்த கடையில டிசைன் சிலதுகள் பிடிக்கேல்ல என்று சொல்லி இன்னுமொரு கடைக்கு போகுனும் என்று சொன்னாங்க ஒகே போவம் என்று போனேன் அதுவுமும் main street அடுத்த பிரபலமான கடை அதுக்கும் போய் ஒரு மணித்தியலத்தில வந்தாங்க நானும் வாங்கின உடுப்பு பாக் bag எல்லாத்தையும் வைத்துக் கொண்டு வெளியில நின்றேன்

வெளியே வந்து அங்கயும் selection சரியில்லை என்று சொல்லி வெளியில வந்து சொன்னாங்க
எனக்குள்ளே நானே கேட்டு கொண்டேன்.
"இந்த ladies ஒட மட்டும் textile கடை பக்கம் இனி மேல் வர கூடாது சாமி இது உனக்கு தேவை கயு "
Mind voice "கயு இதுக்கே இப்பிடி புலம்பின பின்னால இத விட வேலை இருக்கு "

ஒரு மாதிரி மூன்று அல்லது நான்கு கடைகளுக்கு ஏறி முடிச்சு ,ஒரு மாதிரி shopping முடிச்சிட்டாங்க சரி ஒகே போகலாம் என்று Three wheeler ஒன்றை நிப்பாட்டினேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"அண்ணே meter பூட்டி இருக்கா "

"ஓ ஓ தம்பி , எங்க போகோணும் ?"

"தேஹிவல க்கு போகனும்  "

"ஒகே ஒகே ஏறுங்க ஏறுங்க .."



ஒரு மாதிரி ஏறி வந்து அந்த ஹில்டன் முன்னால வந்தோன நேரே வார lotus road வந்து Presidential Secretariat Office போக எழாது ஆதலால் lake house round board ல வந்து தான் திரும்பி போகனும் galle face ல போற என்றால்

three wheel கார அண்ணே கங்காராம ரோட்ல விட்டார் நான் சொன்னேன் அண்ணே galle face ரோட்டல போகலாமே , தம்பி எல்லாம் ஒன்று தான்

உடனே நான் என்னுள்ளே

"அண்ணே எனக்கு கொழும்பு சுற்றி காட்ட போறாரோ "

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தம்பி நான் தேஹிவல hire ஒன்று கிடைத்ததும் சந்தோசமாக தான் வந்தேன் .."

நான் காலையில இருந்து main streetல சுற்றி கொண்டு இருக்கேன் ஆனாலும் 270/= தான் கிடைச்சது தேஹிவல hire என்றவுடன் சந்தோசமாய் தான் வந்தேன்

நானும் முதல் ஒரு நல்லாய் காசு வைத்து செலவலித்தவன் , ஆனாலும் இப்ப கொஞ்சம் கஷ்டபட்டு இருக்கேன் , காலையில வரக்குள்ள எனது மகன் 15 வயது

"வாப்பா காசு இருந்தா தாங்க சாப்பாடு வேண்டோணும் "

"இல்லை .மகன் நான் hire போய்ட்டு பகல் வரக்குள்ள சாப்பாடு வாங்கிட்டு வாறன் "
"மாரி பிஸ்கட் வாங்கவது காசு தாங்கலேன் "

இப்ப தானே இல்லை என்று சொன்னேன் என்று அடித்தேன் ,அப்ப எனது மனைவி என்னை ஏசினார் மற்றும் குழம்பினார் .

ஏன் என்றா அவர் ஒரு மன நோயாளி ,கடந்த இரு வருடங்களுக்கு முன் ஏற்ப்பட்டது , மனைவியை கடந்த ரெண்டு வருடமாய் nawalaoka hospital Chanel பண்ணி காட்டி வாறேன் ,
முதல் காட்ட போகக்குள்ள channel பண்ண 850/= charge  பண்ணுவாங்க ஆனா இப்ப 1950/= charge பண்ணிறாங்க என்று சொல்லி ஒரு கறுப்பு பையை எடுத்து எனக்கு காட்டினார்

மனைவியின் medical report அதில் இருந்தது

மனைவிக்கும் இன்னுமொருக்கு channel பண்ணோணும் ஆனால் அதுக்கும் 1950/= வேணும் , அதுக்கும் காசு இல்லை தம்பி , வீட்டுக்கு பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் சொல்லுறாங்க

"இவங்கள கொண்டே அங்கொடை ல விடுங்க "

 ஆனா எனது மகள் வயது 18 அவா சொல்லுறா

"அம்மா வை அங்கொட யில கொண்டே விட வேண்டாம் "

நானும் அவரின் கதையில் மனம் உருகி கேட்டு கொண்டு இருந்தேன் , அப்போது இடத்தை பார்த்தேன் கொள்ளுப்பிட்டி

"தம்பி நான் சொல்லுற பற்றி எதுவும் நினைக்காதிங்க என்ட மனக்கவலையை சொல்லுறேன் "

நான் எவ்வளவு மருந்து எனது மனைவிக்கு வாங்கினேன் என்று ஒரு pharmacy  ட பெயர் சொன்னார் எனக்கு தெரியவில்லை அது கொடஹென இருக்கு என்று சொன்னார்

அங்க கேட்ட தெரியும் என்றார் 

நான் அப்போது நிறைய பணம் இருந்து மருந்து வேண்டினேன் ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டப் பட்டு போனேன் , அப்ப இறைவன் வாரி கொடுத்தான் செலவளித்தேன் அதுதான் போல இறைவன் என்னை கஷ்ட படுத்திறான்

இருந்தாலும் இன்றும் நான் பள்ளிக்கு போறேன் ஏன்னெனில் எல்லாம் அவன் வழி என்று சொன்னார்.

" இந்த காசில தான் இரண்டு சாப்பாட்டு பாசல் வாங்கி கொண்டு வீடுக்கு போய் குடுக்கோணும் என்று சொல்லி "

தனது பாக்கெட் ல இருந்த ஒரு வெள்ளை துணியை எடுத்து தனது விழிகளை துடைத்தார் . Three wheel பம்பலபிடிய சந்தில சிக்னல் லைட் ல நின்றது

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுக்கு பிறகு ஒரு சம்பாஷனையும் இல்லை வீடு வந்தது ,  meter 436 /= காட்டியது நான் 450 /= குடுத்திட்டு இறங்கினேன்




 பணத்திற்கு அலைந்திடும் வாழ்க்கை

Note : கற்பனை கலக்காத உண்மையான சம்பவம் பணத்தின் வலிமையை உணர்த்திய ஒரு Three wheeler பயணம் .






Saturday, June 22, 2013

தீயா வேலை செய்யோணும் குமாரு

எதிர்பார்ப்பு அதிகம் ,சாந்தானம் கலக்குவார் என்ற ஒரே நம்பிக்கையுடன் சென்றேன் ஈரோஸ் க்கு  , சிறிது தாமதம் எழுத்து ஓட்டம் ஓடும் தியடோரில் சென்றோம் .



கதை ,திரைக்கதை, இயக்கம் சுந்தர் சி  என்பதால் அவரின் பாணியில் ஆனா நையாண்டி , காமெடி குறைவில்லாத கதை நகர்வு என்று தான் நினைக்க தோன்றியது , கதை கரு இலகுவானது ஒன்று அதை கூறிய விதம் அழகு , இருப்பினும் எனக்கு திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது பல பொழுது எனக்கு சந்தேகம் எழுந்தது , சாந்தானம் இத்திரைப்படத்துக்கு கதாநாயகனா ?? சித்தார்த் கதாநாயகனா ??..




ஏன்னெனில் திரைப்படம் தொடக்கி, முதல் 20 நிமிடம் தவிர முழு திரைப்படத்திலும் அவரின் நடிப்பு தான் .

என்னோடு படம் பார்க்க வந்த நண்பன்  SAM சொன்னான் "சுந்தர் சி  ஒவ்வொரு சீன் எடுக்கும் போது அவருக்கே விளங்கி இருக்காது படம் முடிஞ்சு எடிட்டிங் செய்யும் போது தான் ஜோசித்திருப்பார்   என்ன கொடுமை சார் படம் முழுதும் சாந்தானம் "

சாந்தானம் , நடிப்பு சொல்லவே வேண்டாம் கலக்கோ கலக்கி இருக்கிறார் . அது தான் இப்ப எல்லாம் இயக்குனர்களுக்கு சாந்தானத்தை தமது படங்களுக்கு உள்வாங்குவதில் பெரும் சிக்கலில் உள்ளனர் . பல படங்கள் அவரின் நேர வசதிக்காய் தாமதித்தும் வெளியிடபடுகின்றது .


எனக்கு சாந்தானத்தில் பிடித்தது  உரையாடல் வீச்சு (dialog delivery) மற்றும் timing  அவரிடம் என்னை கவர்ந்தது . அவர் தமக்கு கொடுத்த வேலையை முகவும் நேர்த்திய செய்துள்ளார் .அவருக்கு எற்றவாறு Dialogue எழுதிய Nalan Kumarasamy மற்றும் Venkat Raghavan ஒரு சபாஸ் தான்

"" தேங்காய் பறிக்கொனும் எண்டா தென்னை மரம் ஏறோணும் குமாரு ""

சித்தார்த் , திரைக்கதை கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது , என்னெனில் எப்போதுமே ஒரு பாவப்பட்ட சுபாவம் அவரிடம் தான் இருக்கு மிகை இல்லாத யதார்த்தமான நடிப்பு படத்துக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது .

கதாநாயகி Hansika Motwani , கதாபாத்திரத்து க்கு ஏற்பதாய் அமையவில்லை என்று எனக்கு தோன்றுகிறது . IT  Firm  amala paul மற்றும் nayantara பார்த்திட்டு இவா பார்க்க எனக்கு செட் ஆகேல்ல போல் தோன்றியது .



இசை சி.சத்யா  , இதமான இசை தேவையா இடங்களில் அதிக குத்து ,அதை கேட்ட போது யுவன் தானோ என்று ஜோசித்தேன் ,அதுவும் இந்த பாடல்

"அழகென்றால் அவள்தானோ..அழகென்றால் அவள்தானோ"

பாடல்கள் படமாக்க பட்ட இடங்கள் யதார்த்தமான இடங்கள் தான் அதை போன்று கேமரா வில் எதுவும் புதுமை இல்லை என எனக்கு என்ன தோன்றியது . இருப்பினும் அது திரைப்படத்துக்கு பொருந்தியுள்ளது .


தயாரிப்பாளரை பொருத்த மட்டில் இத்திரைப்படம் நிச்சியம் திருப்த்தி ஆக்கும் என்பதில் ஐயமில்லை .

ஒரு கலக்கல் தான்