வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Friday, July 12, 2013

காதல் சொன்ன திரைக்காவியங்கள்

Susindran இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு , இந்த திரைப்படம் காதலை எளிமையும் யதார்த்தமும் கலந்த ஒரு படம் தான் , கபடி விளையாட்டை படத்தின் களமாய் எடுத்து படம் அமைக்க பட்டாலும்



கிராம சாயலிலான ஒரு காதலை திரைப்படத்தில் கோர்த்து படம் ஆக்கியமை மிகவும் அற்புதம் அதுவும் இந்த பாடல்,



ஒவ்வொரு பிரமே (frame in movie ) உம் காதலை அழாகாக வெளிபடுத்தியது.


 " பெண்ணின் ஒவ்வொரு கருவிழி அசைவும் "

" முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் வதனம் பார்க்க பின்னால் வந்து காதலன் தன் முகம் பார்க்க வெட்க்கப்படும் தருணம் "

" காலில் அணிந்து  இருக்கும் கொலுசின் சிணுங்கள் "

" திருவிழா கூட்டத்தில் காதலனை தேடும் விழிகளும் , காதலியை தேடும் விழிகள் "

" அவளின் காதணி யின் அசைவு "



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



Balaji Sakthivel இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 , இந்த திரைப்படம்  இரு  வறுமையின் காதலை யதார்த்தமும் கலந்த விருந்தளித்த  ஒரு படம் தான் , இன்றைய இளைஞர் கள் மற்றும் யுவதிகளின் உண்மை நிலையை   படத்தின் களமாய் எடுத்து படம் அமைக்க பட்டாலும்



வறுமையின் செல்வந்த காதலை   திரைப்படத்தில் கோர்த்து படம் ஆக்கியமை மிகவும் அற்புதம் அதுவும் இந்த பாடல்




இந்த பாடல் ஏழையின்  காதலை அழாகாக வெளிபடுத்தியது

காதலனை  காணும் போது காதலி ஏழைக்கு உரிய பாணியில் பயம் கலந்த வெட்கத்தில் செல்வது "

" காதலியின் ஒரு படத்தை பேர்சில்(Purse)  வைத்து பார்த்து ரசிப்பது "

" காதலன் கற்பனையில் காதலியுடன் வாழ்வது போன்று கனவு காண்பது "

" கானாவிலும் அன்பை பரிமாறி வாழும் வாழ்க்கை "


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2012 ஆம் ஆண்டு வெளிவந்த K.S.Thangasamy  யின் ராட்டினம்  ,

ஆழமான காதலின் வெற்றி அல்லது தோல்வியின் பின்னல் ஓர் காரணம் உண்டு அது உறவாகவோ அல்லது அதனையும் தாண்டியதாய் அமைகிறது 



படத்தின் வரும் இப்பாடல் ஒரு பள்ளி காதலை கன்னியமாய் வெளிபடுத்தும்



"அவளின் முகவசைவு ஒவ்வொன்றும் ஆயிரம் காதல் மொழிகள் பேசுதல்"

"மோட்டார் பைக் இல் அவளின் நினைவில் செல்லுதல்"

இது நம்மள நிறைய பசங்களுக்கு நடந்து இருக்கு பட் வெளியில காட்டி கொள்ள மாட்டாங்க
"அவளின் புன்னைகையை ரசிக்கும் காதலன் "


"இருவரும் சந்திக்கும் போது மெலிதான நலினமுடைய காதல் பார்வை "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2009 ஆம் ஆண்டில் Pandiraj யின் கலை வண்ணத்தில் வெளிவந்த திரைப்படம் பசங்க , சிறுவர்களுக்கான பிரச்சினைகள் அவர்களின் அறியமையால் இது எவ்வாறு பெரியவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது .



இருப்பினும் இதில்  காதல் ஒன்றை செல் போன் வாயிலாக பிணைந்துள்ளார் ,அதுவும் இந்த பாடல்



"காதலியை போட்டோ பிடிப்பது (PAPER CAMERA) , காதலின் சிறு குறும்பு"

" மழையில் செய்யும் குறும்பு தனமா காதல் விளையாட்டு "

" வைரமுத்துவின் கவிதையை காதலிக்கு அஞ்சலிடுவது தான் எழுதியது போல் "


" காதலியுடன் விழியால் பேசும் காதல் மாயம் "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இவரிசையில் மேலும் சில

  • ஆடுகளம்
  • களவாணி



விமல் அண்ணாவின் திருமண வைபத்தில் செந்தூரன் அண்ணாவுடன் சம்பாசனையில் திடீர் என உதிர்த்த ஒரு டொபிக்

காதலை காதலாக திரைக்குள் உள் வாங்கிய படம் அதுவும் அவர் சொன்ன இன்னுமொரு விடயம்

" இந்த galle face மற்றும் park இல் காதல் எனும் போர்வையில் காதலை கொலை செய்வோருக்கு இதிரைபடங்களை திரையிட்டு காட்ட வேண்டும்  "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

விழிகள் பேசியது
வார்த்தைகள் தடுமாறியது
கனவுகள்  போட்டியிடுகிறது
 - காதலில் 




Sunday, June 30, 2013

அலைந்திடும் வாழ்க்கை

காலை 11.30 மணிக்கு ஆட்டோவில் புறக்கோட்டைக்கு ஒரு பயணம் ,அதுவும் ஷாப்பிங் (shopping) போனோம் ,



முதல் ஒரு டெக்ஸ்டைல் main street ல இருக்கிற ஒரு பிரபலமானா கடை  , நானும் அவையை விட்டுட்டு வேறு ஒரு கடைக்கு போனேன் , நான் கடைக்கு பொய் வந்திட்டேன் ஒன்றறை மணித்தியாலத்தில  இருந்தாலும் டெக்ஸ்டைல்க்கு  போனவை இன்னும் வரவில்லை , நானும் அந்த கடைக்குள்ள போனேன் , நான்கு சுடிதார் எடுத்து வைத்து கொண்டு இருக்கினம் , ஒரு சுடிதார் சராசரி விலை 6000/=  - 7000/=




அந்த கடையில ஏறத்தாழ ரெண்டு மணித்தியாலங்கள் நானும் நின்றேன் , அங்க ஒரு மாதிரி முடிச்சு கொண்டு வந்தாங்க இருப்பினும் மறக்காமா  அங்க ஒரு பெரிய பில் வைத்திட்டு தான் வந்தவை


  "அப்ப இப்ப யாவது முடிச்சிட்டு வந்திட்டினம் என்று நினைக்க "

அந்த கடையில டிசைன் சிலதுகள் பிடிக்கேல்ல என்று சொல்லி இன்னுமொரு கடைக்கு போகுனும் என்று சொன்னாங்க ஒகே போவம் என்று போனேன் அதுவுமும் main street அடுத்த பிரபலமான கடை அதுக்கும் போய் ஒரு மணித்தியலத்தில வந்தாங்க நானும் வாங்கின உடுப்பு பாக் bag எல்லாத்தையும் வைத்துக் கொண்டு வெளியில நின்றேன்

வெளியே வந்து அங்கயும் selection சரியில்லை என்று சொல்லி வெளியில வந்து சொன்னாங்க
எனக்குள்ளே நானே கேட்டு கொண்டேன்.
"இந்த ladies ஒட மட்டும் textile கடை பக்கம் இனி மேல் வர கூடாது சாமி இது உனக்கு தேவை கயு "
Mind voice "கயு இதுக்கே இப்பிடி புலம்பின பின்னால இத விட வேலை இருக்கு "

ஒரு மாதிரி மூன்று அல்லது நான்கு கடைகளுக்கு ஏறி முடிச்சு ,ஒரு மாதிரி shopping முடிச்சிட்டாங்க சரி ஒகே போகலாம் என்று Three wheeler ஒன்றை நிப்பாட்டினேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"அண்ணே meter பூட்டி இருக்கா "

"ஓ ஓ தம்பி , எங்க போகோணும் ?"

"தேஹிவல க்கு போகனும்  "

"ஒகே ஒகே ஏறுங்க ஏறுங்க .."



ஒரு மாதிரி ஏறி வந்து அந்த ஹில்டன் முன்னால வந்தோன நேரே வார lotus road வந்து Presidential Secretariat Office போக எழாது ஆதலால் lake house round board ல வந்து தான் திரும்பி போகனும் galle face ல போற என்றால்

three wheel கார அண்ணே கங்காராம ரோட்ல விட்டார் நான் சொன்னேன் அண்ணே galle face ரோட்டல போகலாமே , தம்பி எல்லாம் ஒன்று தான்

உடனே நான் என்னுள்ளே

"அண்ணே எனக்கு கொழும்பு சுற்றி காட்ட போறாரோ "

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தம்பி நான் தேஹிவல hire ஒன்று கிடைத்ததும் சந்தோசமாக தான் வந்தேன் .."

நான் காலையில இருந்து main streetல சுற்றி கொண்டு இருக்கேன் ஆனாலும் 270/= தான் கிடைச்சது தேஹிவல hire என்றவுடன் சந்தோசமாய் தான் வந்தேன்

நானும் முதல் ஒரு நல்லாய் காசு வைத்து செலவலித்தவன் , ஆனாலும் இப்ப கொஞ்சம் கஷ்டபட்டு இருக்கேன் , காலையில வரக்குள்ள எனது மகன் 15 வயது

"வாப்பா காசு இருந்தா தாங்க சாப்பாடு வேண்டோணும் "

"இல்லை .மகன் நான் hire போய்ட்டு பகல் வரக்குள்ள சாப்பாடு வாங்கிட்டு வாறன் "
"மாரி பிஸ்கட் வாங்கவது காசு தாங்கலேன் "

இப்ப தானே இல்லை என்று சொன்னேன் என்று அடித்தேன் ,அப்ப எனது மனைவி என்னை ஏசினார் மற்றும் குழம்பினார் .

ஏன் என்றா அவர் ஒரு மன நோயாளி ,கடந்த இரு வருடங்களுக்கு முன் ஏற்ப்பட்டது , மனைவியை கடந்த ரெண்டு வருடமாய் nawalaoka hospital Chanel பண்ணி காட்டி வாறேன் ,
முதல் காட்ட போகக்குள்ள channel பண்ண 850/= charge  பண்ணுவாங்க ஆனா இப்ப 1950/= charge பண்ணிறாங்க என்று சொல்லி ஒரு கறுப்பு பையை எடுத்து எனக்கு காட்டினார்

மனைவியின் medical report அதில் இருந்தது

மனைவிக்கும் இன்னுமொருக்கு channel பண்ணோணும் ஆனால் அதுக்கும் 1950/= வேணும் , அதுக்கும் காசு இல்லை தம்பி , வீட்டுக்கு பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் சொல்லுறாங்க

"இவங்கள கொண்டே அங்கொடை ல விடுங்க "

 ஆனா எனது மகள் வயது 18 அவா சொல்லுறா

"அம்மா வை அங்கொட யில கொண்டே விட வேண்டாம் "

நானும் அவரின் கதையில் மனம் உருகி கேட்டு கொண்டு இருந்தேன் , அப்போது இடத்தை பார்த்தேன் கொள்ளுப்பிட்டி

"தம்பி நான் சொல்லுற பற்றி எதுவும் நினைக்காதிங்க என்ட மனக்கவலையை சொல்லுறேன் "

நான் எவ்வளவு மருந்து எனது மனைவிக்கு வாங்கினேன் என்று ஒரு pharmacy  ட பெயர் சொன்னார் எனக்கு தெரியவில்லை அது கொடஹென இருக்கு என்று சொன்னார்

அங்க கேட்ட தெரியும் என்றார் 

நான் அப்போது நிறைய பணம் இருந்து மருந்து வேண்டினேன் ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டப் பட்டு போனேன் , அப்ப இறைவன் வாரி கொடுத்தான் செலவளித்தேன் அதுதான் போல இறைவன் என்னை கஷ்ட படுத்திறான்

இருந்தாலும் இன்றும் நான் பள்ளிக்கு போறேன் ஏன்னெனில் எல்லாம் அவன் வழி என்று சொன்னார்.

" இந்த காசில தான் இரண்டு சாப்பாட்டு பாசல் வாங்கி கொண்டு வீடுக்கு போய் குடுக்கோணும் என்று சொல்லி "

தனது பாக்கெட் ல இருந்த ஒரு வெள்ளை துணியை எடுத்து தனது விழிகளை துடைத்தார் . Three wheel பம்பலபிடிய சந்தில சிக்னல் லைட் ல நின்றது

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுக்கு பிறகு ஒரு சம்பாஷனையும் இல்லை வீடு வந்தது ,  meter 436 /= காட்டியது நான் 450 /= குடுத்திட்டு இறங்கினேன்




 பணத்திற்கு அலைந்திடும் வாழ்க்கை

Note : கற்பனை கலக்காத உண்மையான சம்பவம் பணத்தின் வலிமையை உணர்த்திய ஒரு Three wheeler பயணம் .






Saturday, June 22, 2013

தீயா வேலை செய்யோணும் குமாரு

எதிர்பார்ப்பு அதிகம் ,சாந்தானம் கலக்குவார் என்ற ஒரே நம்பிக்கையுடன் சென்றேன் ஈரோஸ் க்கு  , சிறிது தாமதம் எழுத்து ஓட்டம் ஓடும் தியடோரில் சென்றோம் .



கதை ,திரைக்கதை, இயக்கம் சுந்தர் சி  என்பதால் அவரின் பாணியில் ஆனா நையாண்டி , காமெடி குறைவில்லாத கதை நகர்வு என்று தான் நினைக்க தோன்றியது , கதை கரு இலகுவானது ஒன்று அதை கூறிய விதம் அழகு , இருப்பினும் எனக்கு திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது பல பொழுது எனக்கு சந்தேகம் எழுந்தது , சாந்தானம் இத்திரைப்படத்துக்கு கதாநாயகனா ?? சித்தார்த் கதாநாயகனா ??..




ஏன்னெனில் திரைப்படம் தொடக்கி, முதல் 20 நிமிடம் தவிர முழு திரைப்படத்திலும் அவரின் நடிப்பு தான் .

என்னோடு படம் பார்க்க வந்த நண்பன்  SAM சொன்னான் "சுந்தர் சி  ஒவ்வொரு சீன் எடுக்கும் போது அவருக்கே விளங்கி இருக்காது படம் முடிஞ்சு எடிட்டிங் செய்யும் போது தான் ஜோசித்திருப்பார்   என்ன கொடுமை சார் படம் முழுதும் சாந்தானம் "

சாந்தானம் , நடிப்பு சொல்லவே வேண்டாம் கலக்கோ கலக்கி இருக்கிறார் . அது தான் இப்ப எல்லாம் இயக்குனர்களுக்கு சாந்தானத்தை தமது படங்களுக்கு உள்வாங்குவதில் பெரும் சிக்கலில் உள்ளனர் . பல படங்கள் அவரின் நேர வசதிக்காய் தாமதித்தும் வெளியிடபடுகின்றது .


எனக்கு சாந்தானத்தில் பிடித்தது  உரையாடல் வீச்சு (dialog delivery) மற்றும் timing  அவரிடம் என்னை கவர்ந்தது . அவர் தமக்கு கொடுத்த வேலையை முகவும் நேர்த்திய செய்துள்ளார் .அவருக்கு எற்றவாறு Dialogue எழுதிய Nalan Kumarasamy மற்றும் Venkat Raghavan ஒரு சபாஸ் தான்

"" தேங்காய் பறிக்கொனும் எண்டா தென்னை மரம் ஏறோணும் குமாரு ""

சித்தார்த் , திரைக்கதை கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது , என்னெனில் எப்போதுமே ஒரு பாவப்பட்ட சுபாவம் அவரிடம் தான் இருக்கு மிகை இல்லாத யதார்த்தமான நடிப்பு படத்துக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது .

கதாநாயகி Hansika Motwani , கதாபாத்திரத்து க்கு ஏற்பதாய் அமையவில்லை என்று எனக்கு தோன்றுகிறது . IT  Firm  amala paul மற்றும் nayantara பார்த்திட்டு இவா பார்க்க எனக்கு செட் ஆகேல்ல போல் தோன்றியது .



இசை சி.சத்யா  , இதமான இசை தேவையா இடங்களில் அதிக குத்து ,அதை கேட்ட போது யுவன் தானோ என்று ஜோசித்தேன் ,அதுவும் இந்த பாடல்

"அழகென்றால் அவள்தானோ..அழகென்றால் அவள்தானோ"

பாடல்கள் படமாக்க பட்ட இடங்கள் யதார்த்தமான இடங்கள் தான் அதை போன்று கேமரா வில் எதுவும் புதுமை இல்லை என எனக்கு என்ன தோன்றியது . இருப்பினும் அது திரைப்படத்துக்கு பொருந்தியுள்ளது .


தயாரிப்பாளரை பொருத்த மட்டில் இத்திரைப்படம் நிச்சியம் திருப்த்தி ஆக்கும் என்பதில் ஐயமில்லை .

ஒரு கலக்கல் தான் 


Thursday, May 23, 2013

நஸ்ரியாவுடன் நாழிகைகள் ..






இப்ப எல்லாம்" நஸ்ரியா நஸ்ரியா.." என்று சொல்லுது . இந்த  தமிழ் சினிமாவில் ஆயிரம் ஹீரோயின் வருவாங்க , வந்ததும் தெரியாம போய்டுவாங்க சிலர் தான் இள மனதினை கவர்ந்து அவர்களின் மனதில் தினமும் வாழும் கானல் நீர்க் காதலி.
 
.
நேரம் பட ஸ்டில் வந்ததும் நஸ்ரியா கண்டதும் எனது முதல் வேலை , முகபுத்தகதில  அவாட எல்லா பக்கத்தையும் லைக் பண்ணினேன் , பின்னர் ட்விட்டரில்   அவாட பொல்லொவ் பண்ணினேன்.


இது மட்டுமா அப்பறம் என்ன  "எந்த ஆணும் ஒரு பொண்ண பார்த்தா , அடுத்ததா அவாட வயது


# பெண்களிடம் வயது கேக்க கூடாது என்பாங்க #

 நமக்கு என்ன கூகுல் இருக்கும் வரைக்கும் என்ன குறை

# ஒரு விடயம் கேட்ட அதற்க்கு நிறைய விளக்கும் தரும் ஒரு கொடை வள்ளல் ,IT நிறுவன துறை யில்  வேலை செய்யும் எவர்க்கும் அதிகம் கைகொடுப்பதும் இது தான் #




நஸ்ரியா அடுத்த கேரளத்து  பயிங் கிளி , 1996 december ,20 திருவனந்தபுரம் உலகத்துக்கு

"Hello World

 ம்ம் அறிமுகம் .ஓர் Business man க்கும் மகளா பிறந்தாவாம் ,

#கயு பிடிச்சாலும் புளியம் கொம்ப தான் பிடிச்சு இருக்காய் #

 ஒரு தம்பியும் இருக்காம் .





 # No Problem சமாளிச்சிடலாம் #

நான் முதலில் நஸ்ரியா  Video பார்த்த பாடல் "காதல் என்னுள்ளே வந்த நேரம் ..." ரஞ்சித்தின் இனிமையான குரலுடன் நஸ்ரியாவின் ஒவ்வொரு யாதார்த்தமான நடிப்பு என்னை கவர்ந்தது .




#எத்தனை தரம் இந்த பாடல பார்த்தேன்...,என்னை அறியாமல் என் ரிங் டோன் ஆன பாடல் #

என்னோட வேலை செய்யிற ஒரு  நண்பன்  (SAM ) சொன்னான்  "அவன் தான் நேரம் படம் பற்றி எனக்கு சொன்னது "  பாஸ் நீங்க முகப்புத்தகத்தில பேஜ் (Page) எ மட்டும் தானே லைக்  (Like)  பண்ணினீங்க  நான் நஸ்ரியா பெயர்   உள்ள  Profile  அனைத்துக்கும்  Friend Request  அனுப்பியாச்சு  என்றான் .


#அப்ப தான் ஜோசித்தன் ரொம்ப Heavy Competition இருக்கும் என்று , விடுங்க பாஸ் ரிஸ்க் எடுக்கிறது நமக்கு ரஸ்க் சாப்பிடிற மாதிரி #

உங்கட Mind Voice : இப்பிடி எத்தனை பெர்ட கிளம்பி இருக்கிறிங்க.


இனி வெளியகிற எல்லா படத்தையும் பார்க்கோணும் நேரம் ,ராஜா ராணி ,நையாண்டி  மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ்

இந்த பொண்ணுங்க இருக்காங்களே தங்கட Profile Photo வ நஸ்ரியா Photo போட தொடங்கிட்டாங்க , முதலெல்லாம் சமந்தாடவ போட்டு வைச்சு இருந்தாங்க இத பற்றி நீங்களே முடிவு பண்ணுங்க நான் எழுதுவதாயின் இன்னுமொரு வலைப்பதிவு தேவை





உன் கரு விழி என்னைக்
கரைத்தது உன்னில் ,
நஸ்ரியாவுடன் நாழிகைகள்
நகர ,
உமை கண்ட கனவு போல்
என் காதல்





இந்த Photo Select  பண்ண நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் 

      ~~~~~~~~~~~~~