வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Tuesday, December 18, 2012

மாயனில்





மாயனில் மூழ்கிய மார்கழி மாதம்

மனிதனின் பகுத்தறிவின் சக்தியால் 
கூட பகுத்தறிய முடியாமால் 
தவிக்கும்பல உளம்

விஞ்ஞானம் கூடகணித்ததோ 
இல்லையேல் மறைக்கிறதோ 
என எண்ண தோன்றுகிறது 

மழை கூட நிறமாலையின் நிறத்தை 
உள் வாங்கி பொழிய 
விழி பிதுங்க சிந்திக்கிறது
 மனித குலம் 

மார்கழி இருபத்தொன்று 
நெருங்க காணும் 
மனித வதனங்களின் - வடிவகள்



காதலியை தேடிய புது 
காதல் சோடிகளின் -முகங்கள் ,

இல்லறத்தில் இணைந்த 
புதுமன தம்பதிகளின் -முகங்கள் ,

கைபேசியில் முத்தமிட்டு
 உறவாடும் உறவுகளின் -முகங்கள்,

ஸ்கைப்பில்  வதனம் 
நோக்கி மகிழ்வுறும் -முகங்கள் ,

ஆலயங்களில் இறைவனை 
தேடும் ஒரு குழாமின் -முகங்கள் ,

செக்கனுக்கு மூன்று முறையாவது 
இறை நாமத்தை ஜெபிக்கும் -முகங்கள்,

ஈற்றில் உறவுகளுடன் இணைய 
துடிக்கும் -முகங்கள் ,



கால நிலைகூட மாயனுக்கு 
துணை  போக - சற்று வியந்தேன் 

எதுக்கும் அஞ்சாது தம் பொம்மைகளுடன்  
சிரித்து  கொண்டு விளையாடும்
 மழலையின்-   சிரிபொலியில்

விடை தெரியா புதுருக்காய் 
நானும்  (kayu) காத்திருக்கிறேன் - உங்களுடன்