வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Thursday, April 25, 2013

Saindhavi vs G.V


இசையில் மலர்ந்த காதலா ?? காதலில் மலர்ந்த இசையா??  எது எவ்வாறாயினும் , இருவரது இசைரிதியான இணைவு என்னை கவர்ந்தது . இருவரின் இணைவில் வந்த பாடல்களில் , முதலில் வெளிவந்த இந்த பாடல் என்றும் இசைக்கு விருந்தாகவே அமையும்.


என்று சைந்தவி முடிக்க (ஒரு விதமான காந்த குரலில் முடிக்க )

அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

பின் G.V இவ்வாறு தொடங்க

என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பணி...

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

இது தான் இசையில் காதல் என எண்ண தோன்றுகிறது.(என்னிலும் காதல் உணர்வை மெல்ல கிள்ளி விட்டு வேறு ஒரு உலகை என்னுள் காட்டியது
)

இக்காலத்தில் என்னை மெய் சிலிர்க்க வைக்கிற பாடல் இது (காதலை இன்னும் இசை தான் உணர வைக்கிறது என்னிலும் உணர வைத்தது )




G.V என தொடங்க

எங்கே உன்னை கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

சைந்தவி இவ்வாறு தொடர

என் பெண்மையும் இளை பாரவே
உன் மார்விலே இடம் போதுமே

G.V மீண்டும் இவ்வாறாக தொடர

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

அதற்க்கு சைந்தவி இவ்வாறு தொடர

மெதுவாக இதயங்கள் இணைகிறதே
G.V இவ்வாறு

உன் கை விரல் என் கை விரல் கேக்கிறதே


சுருதியும் தாளமும் சேர்ந்து இசை பிறப்பது போன்று இருவரும் இல்லறத்திலும் இசைத் துறையிலும் பிரகாசிக்க இவ் ரசிகனின் வாழ்த்துக்கள்..