நான் பார்த்த திரைப்படங்களில் வெளியாகி எட்டு நாளுக்கு மேல் ஆகியும் ஹவுஸ் புல் ஷோ (House Full Show) பார்த்த அனுபவத்தை அளித்தது மாற்றான் ..
இந்த படத்தை பார்க்க முன்னர் நான் சாருலதா படத்தையும் பார்த்து விட்டேன்
இயக்குனர் K. V. ஆனந்த் படத்தை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார் "இந்த கதை சூர்யாவின் அயன் இயக்க முதலே கதையை அவரிடம் சொன்னரும் சில காரணங்கள் அது எடுக்க முடியவில்லை , இருப்பினும் ஏழாம் அறிவின் பினர் சூர்யாவே இந்த படத்தை ஆரம்பிப்பம் என்று சொன்னார்" ..
இதன் வடிவமே மாற்றான் ..
படத்தில் சூர்யா பாரிய கடையமை செய்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் முதல் பாதி அதுவும் கிட்டதட்ட 90 நிமிடங்கள் ரெட்டயரை கொண்டே காட்ச்சியமைக்க பட்டுள்ளது. அதில் இருவரும் இரு விதமான செயற்ப்பாடுகளை கொண்ட ஒட்டி பிறந்த ரெடடையர்கள் ஒவ்வொரு திரைச்சட்டமும் (Frame) மிகவும் கடினமானது அதை செவ்வனவே நடித்துள்ளார் .
இரு குணங்களை உடைய இருவரையும் ஒரே திரை ச்சட்டத்க்குள் (Frame) ிக அழக நடித்துள்ளார் அதில் ஒரு சண்டைகாட்சி வேற உள்ளடக்கபட்டுளது .. சூர்யா க்கு நடப்புக்கு சாபஸ் போடத்தான் வேண்டும் .
நாயகி கஜல் அக்கர்வால் க்கு இந்த படத்தில் பாரிய பகுதி கொடுத்துள்ளார் இயக்குனர் , அதை நாயகியும் மிக அழகாக நிறைவேற்றி உள்ளார் ஏனெனில் இரு குணங்களை உடைய இருவருடன் நடிக்க வேண்டும் அதுவும் முதல் திரைப்பாதியில் இவரும் அதிகம் கஸ்ரப்பட்டு இருக்கிறார் . கஜல் க்கும் சபாஸ் தான் சகுனியுடன் ஒப்பிடும் போது
இயக்குனர் K. V. ஆனந்த் யின் நான்காவது படம் மிகவும் அதிக சவால் எடுத்து இயக்கிய படம் என்றால் மிகையில்லை , அதுவும் துணிச்சலுடன் முதல் பாதி வரைக்கும் இரட்டையரை கொண்டு கதை அமைத்தமை . அது சில சமயம் நிண்ட நேரம் போல தோன்றினாலும் அவரின் இம்முயற்ச்சிக்கு ஒரு சாபஸ் தான் .
இறுதி பாதியில் வரும் சண்டைக்காட்சி தான் எதோ அடுத்த விஜயகாந்து தான் சூர்யா என எண்ண தோன்றுகிறது அதை கொஞ்சம் யதார்த்தமாய் எடுத்து இருக்கலாம் .
மேலும் இயக்குனர் K. V. ஆனந்த் என்றாலே காட்சிகள் அமைக்கப்பட்ட இடம் தான் கவனத்தில் கொள்ளப்படும் ஏனெனில் அவரின் திரையுலக அறிமுகமே ஒரு கேமரா மன் ஆக தான் அதுக்கு ஏற்றப பாடல்கள் மிக அழகா காட்சியமைத்துளார் அதுவும் ,
"நாணி கோணி ..."பாடல் மிக அழகாக திரையாக்க பட்டுள்ளது . சூர்யா மற்றும் கஜலின் நடிப்பு பாடல் காட்சிகளில் ம் ம் ம் ம் ..
ஹாரிஸ் ஜெயராஜ் யின் இசையில் பாடல்கள் ஒரே பாணியிலான இசையாயினும் பிரம்மதம் தான் .. காட்சியமைப்புடன் பின்னி போது சபாஸ் தான் ..
பாடல் வரிகள் எல்லாமே கதைக்கு சமாந்திரமாய் செல்கிறது அதுவும் தாமரையின்
இந்த வரி ..(அதுவும் திரையில் கஜலின் புன்னகை ம் ம் ம் ம் )
"முகத்திரை அதை தள்ளி பார்த்தல்
முறைக்கிறாய் நீ நின்று
கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் .."
தாம் ஏற்ற சவாலில் சூர்யா மற்றும் இயக்குனர் 80% விதம் வெற்றியடைந்து உள்ளனர்
முழுக்கதையை நோக்கின் படத்துக்கு சபாஸ் தான்

















